மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையை பொது மக்கள் தொடர்புகொள்ளும் வகையில் கூடுதல் செல்லிடப்பேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளன.
திருப்பூர் மாநகர கட்டுப்பாட்டு அறையை பொது மக்கள் தங்களது அவசரத் தேவைக்கு தொடர்புகொள்ள வசதியாக ஏற்கெனவே அவசர தொலைபேசி எண் 100 பயன்பாட்டில் இருந்து வருகிறது.
மாநகரில் அதிகப்படியான மக்கள் தொகை இருப்பதன் காரணமாக நாள்தோறும் அவசர தொலைபேசி எண்ணுக்கு அழைப்புகள் அதிகமாக வருகின்றன. இதனால் சில நேரங்களில் பொது மக்கள் காவல் துறையினரைத் தொடர்பு கொள்வதில் தாமதம் ஏற்படுகிறது.
இந்த சிரமத்தைப் போக்கும் வகையிலும், பொது மக்கள் சுலபமாக காவல் துறையினரைத் தொடர்புகொள்ளுவதற்கு வசதியாகவும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு 94981 81209, நுண்ணறிவுப் பிரிவுக்கு 94981 01300 ஆகிய செல்லிடப்பேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.