தாராபுரம் பகுதி மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை பெற டிசம்பர் 9 இல் சிறப்பு முகாம்

மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் நடைபெறும் சிறப்பு முகாமில் பங்கேற்று பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் நடைபெறும் சிறப்பு முகாமில் பங்கேற்று பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது:
திருப்பூர் மாவட்டத்தில், மாதாந்திர உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் மனவளர்ச்சி குன்றியோர், கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் (40 சதவீதத்துக்கும் மேல்), கண் பார்வையற்றோர் மற்றும் செவித் திறன் குறையுடைய மாற்றுத் திறனாளிகளில், 100 சதவீதம் 
மாற்றுத் திறனாளிக்கான அடையாள அட்டை பெற்று, இதுநாள் வரை மாதாந்திர உதவித் தொகை பெறாதவர்கள் உதவித் தொகை பெற சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
  அதன்படி,   தற்போது தாராபுரம் வட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள், டிசம்பர் 9-ஆம் தேதி (சனிக்கிழமை),  அரசு மருத்துவமனை அருகில் நடைபெறவுள்ள சிறப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். 
முகாமில் கலந்து கொள்ளும் மாற்றுத் திறனாளிகள், தங்களின் மாற்றுத் திறனாளி அடையாள அட்டை  நகல், குடும்ப அட்டை  நகல், ஆதார் அட்டை நகல், வங்கிக் கணக்குப் புத்தக நகல் மற்றும் 2 புகைப்படங்கள் ஆகியவற்றுடன் நேரில் வந்து,  மாதாந்திர உதவித் தொகைபெற விண்ணப்பித்துப் பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com