ஆசிரியப் பணி என்பது அறப்பணி என்று பல்லடம் பள்ளி விழாவில் "விஷன்-2020' நிறுவனர் திருச்செந்தூரான் பேசினார்.
கல்வி வளர்ச்சி நாள் சிறப்பு நிகழ்ச்சி, பல்லடம் அருகே சேடபாளையத்திலுள்ள யுனிவர்சல் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பள்ளித் தாளாளர் ராஜகோபால் தலைமை வகித்தார். இதில் விஷன்-2020 நிறுவனர் திருச்செந்தூரான் பேசியது:
பெற்றோரும், ஆசிரியர்களும் உலகில் பூஜிக்க வேண்டிய தெய்வங்கள். அதிலும் ஆசிரியர்களால் மட்டுமே சிறந்த மனிதர்களை உருவாக்க முடியும். ஆசிரியப் பணி என்பது ஓர் அறப்பணி ஆகும். ஆசிரியர்களுக்கு மிகவும் மதிப்பளித்த தேசத் தலைவர் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆவார். அவர் தனது வாழ்நாளில் 2.5 கோடி மாணவர்களைச் சந்தித்துள்ளார் என்றார்.