சேவூர் பாரத ஸ்டேட் வங்கியில் ஆதார் எண் இணைப்பதற்கான சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 18) தொடங்குகிறது.
இது குறித்து சேவூர் பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் எஸ்.இளங்கோவன் கூறியது:
வாடிக்கையாளர்கள், தங்களுடைய வங்கி கணக்கில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம், சேவூர் ராஜ வீதியில் செயல்படும் வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்தில்
நடைபெற உள்ளது. இப்பணி இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது. ஆதார் எண் இணைப்பது தொடர்பான சந்தேகங்களுக்குத் தீர்வு காண சேவூர் பாரத ஸ்டேட் வங்கி வணிகத் தொடர்பாளர் சசிகுமாரை 9965 317160 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.