தொழிலாளி வீட்டின் பூட்டை உடைந்து ரூ.5 லட்சம் திருட்டு
பல்லடத்தில், பின்னலாடைத் தொழிலாளி வீட்டின் கதவை உடைத்து ரூ. 5 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
பல்லடம், கள்ளகிணறு பகுதியைச் சேர்ந்தவர் செல்லமுத்து மகன் தங்கவேல் (36). இவர், அதே பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வித்யா (30). இவர்களது மகன்கள் கிஷோர், கௌசிக்.
தங்கவேல் தன் குடும்பத்தாருடன் ஞாயிற்றுக்கிழமை காலை கோவைக்கு சென்றார். பின்னர் அவர்கள் இரவு 11.30 மணி அளவில் வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் தாழ்பாள் உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இவரது வீட்டுக் கதவின் தாழ்பாளை உடைத்து மர்ம நபர் உள்ளே புகுந்து, பீரோவில் தொங்கிக்கொண்டிருந்த சாவியால் பீரோவைத் திறந்து, ரூ. 5 லட்சம் ரொக்கத்தைத் திருடி சென்றுள்ளனர். சம்பவ இடத்தில் பல்லடம் டி.எஸ்.பி.முத்துசாமி ஆய்வு செய்தார்.
இது குறித்த புகாரின் பேரில் பல்லடம் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் முத்துசாமி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.