உடுமலை அரசு மருத்துவமனை சார்பில் திங்கள்கிழமை டெங்கு விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றது.
இந்திய மருத்துவ சங்கக் கட்டடத்தில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்குக்கு திரு ப்பூர் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் வி.சௌந்திரராஜன் தலைமை வகித்தார்.
நகராட்சி ஆணையர் க.சரவணகுமார் முன்னிலை வகித்தார்.
இதில், உடுமலை வரு வாய்க் கோட்டாட்சியர் அ.சாதனைக்குறள், திருப்பூர் மாவட்ட மருத்துவமனை தலைமை மருத்துவர் பிரியா விசுவாசம், இந்திய மருத்துவ சங்க நிர்வாகிகள், நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலிய ர்கள், உடுமலை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் மாரியம்மாள், மருத்துவர் முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.