வெள்ளாடு வளர்ப்பு குறித்த இலவசப் பயிற்சி திருப்பூரில் புதன்கிழமை (ஜூன் 21) நடைபெறுகிறது.
இதுகுறித்து கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத் தலைவர் அர்த்தநாரீஸ்வரன் கூறியதாவது:
கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் திருப்பூரில் ஜூன் 21-ஆம் தேதி (புதன்கிழமை) வெள்ளாடு வளர்ப்பு குறித்த இலவசப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. திருப்பூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் உள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில், காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை இப்பயிற்சி அளிக்கப்படும். இதில், திருப்பூர் சுற்றுவட்டார விவசாயிகள் பங்கேற்கலாம். வெள்ளாடு வளர்ப்பில் உள்ள விஞ்ஞான முறைகள், வர்த்தக வாய்ப்புகள் குறித்து இப்பயிற்சியில் தெரிவிக்கப்படும். பயிற்சிக்கு வருபவர்கள் தங்களது ஆதார் அட்டையுடன் வர வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 0421-2248524 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.