கால்நடைகளுக்கு மானிய விலையில் உலர் தீவனம்

தாராபுரத்தில் கால்நடைத் துறை சார்பில், உலர் தீவனம் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

தாராபுரத்தில் கால்நடைத் துறை சார்பில், உலர் தீவனம் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.
கால்நடைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு அடையாள அட்டையின் பேரில், கால்நடைகள் வளர்க்கும் எண்ணிக்கையை பொருத்து மானிய விலையில் உலர் தீவனம் வழங்கப்படுகிறது. தாராபுரம் கால்நடைத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு ஐந்தரை டன் உலர் தீவனம் வந்தது. தீவனம் வழங்கும் பணியை கால்நடை மருத்துவர்கள் வெங்கடேசன், அர்ஜுனன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டனர்.
105 கிலோ உலர் தீவனம் 55 நபர்களுக்கு பதிவுகளின் அடிப்படையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. வறட்சியான காலத்தில் தரமான உலர் தீவனம் வழங்குவது பயனுள்ளதாக இருக்கிறது என்று தாசநாயக்கன்பட்டியை காளியாத்தாள் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com