கால்பந்து சூப்பர் லீக் போட்டி: யுனிவர்சல் அணி வெற்றி

திருப்பூர் மாவட்ட கால்பந்து சூப்பர் லீக் போட்டியில் யுனிவர்சல் அணி வெற்றி பெற்றது.

திருப்பூர் மாவட்ட கால்பந்து சூப்பர் லீக் போட்டியில் யுனிவர்சல் அணி வெற்றி பெற்றது.
திருப்பூர் மாவட்ட கால்பந்து லீக் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில், மாவட்ட கால்பந்து கழகத்தின் கீழ் பதிவு பெற்ற 17 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இரு பிரிவுகளிலும் லீக் போட்டிகள் நிறைவு பெற்று சூப்பர் லீக் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின.
இப்போட்டிக்கு தகுதி பெற்ற ஏ.எஸ்.சி., யுனிவர்சல், சேயூர், எம்.பி.சாகர் அணிகள் இடையில் போட்டிகள் நடைபெற்றன.
இதில், 15-வேலம்பாளையம் மைதானத்தில் நடைபெற்ற சூப்பர் லீக் முதல் ஆட்டத்தில் ஏ.எஸ்.சி., யுனிவர்சல் அணிகள் மோதின. இதில்,  2-0 என்ற கோல்கள் கணக்கில் யுனிவர்சல் அணி வெற்றி பெற்றது. மாலை நடைபெற்ற
ஆட்டத்தில் எம்.பி.சாகர் அணி 1-0 என்ற கோல் கணக்கில் சேயூர் அணியை வென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com