தமிழக உள்ளாட்சித் தேர்தலில் ரத்தாகியுள்ள நிலையில், அதில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுவுடன் செலுத்திய டெபாசிட் தொகையை திரும்ப பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பல்லடம் நகராட்சி ஆணையர் ஒ.ராஜாராம் தெரிவித்ததாவது:
கடந்த ஆண்டு நடைபெறுவதாக இருந்த தமிழக உள்ளாட்சித் தேர்தல் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவால் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், அத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்தவர்களிடம் இருந்து பெறப்பட்ட வைப்புத் தொகையை திரும்ப வழங்குமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
எனவே, வேட்புமனு தாக்கல் செய்தவர்கள், விண்ணப்பத்துடன் வைப்பு தொகை செலுத்தியதற்கான ரசீது கடிதம் இணைத்து வைப்புத் தொகையினை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்றார்.