பல்லடம் அருகே 180 மதுபாட்டில்கள் பறிமுதல்

பல்லடம் அருகேயுள்ள கரடிவாவியில் 180 மதுபாட்டில்களை போலீஸார் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.

பல்லடம் அருகேயுள்ள கரடிவாவியில் 180 மதுபாட்டில்களை போலீஸார் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.
பல்லடம் அருகேயுள்ள கரடிவாவியில் காமநாயக்கன்பாளையம் போலீஸார் வாகன தணிக்கையில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக காரில் வந்தவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள், காரணம்பேட்டையைச் சேர்ந்த கணேசமூர்த்தி (35), சண்முகம் (35) என்பதும், காரில் காரில் 180 மதுபான பாட்டில்களை கடத்திச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்த 180 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com