வெள்ளக்கோவிலில் லாரி மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார்.
வெள்ளக்கோவில், எல்.கே.சி. நகரைச் சேர்ந்தவர் துரைசாமி (52). இவர் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள தேநீர்க் கடையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், கடைக்கு அருகே சாலையைக் கடந்துள்ளார். அப்போது அவ்வழியே வந்த லாரி மோதியதில் பலத்த காயமடைந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கெனவே அவர் இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, வெள்ளக்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.