தேர்ச்சி சதவீதம்: குறைந்த மெட்ரிக் பள்ளிகள், அதிகரித்த அரசுப் பள்ளிகள்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நடப்பாண்டில் மெட்ரிக் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. அதே நேரத்தில் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நடப்பாண்டில் மெட்ரிக் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. அதே நேரத்தில் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது.
10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் திருப்பூரில் 134 அரசுப் பள்ளிகளில் இருந்து  5,478 மாணவர்கள், 5,204 மாணவிகள் உள்பட 10 ஆயிரத்து 682 பேர் தேர்வெழுதினர். இதில், 5,175 மாணவர்கள், 5 ஆயிரத்து 25 மாணவிகள் என மொத்தம் 10 ஆயிரத்து 200 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 94.47%, மாணவியர் 95.49% என மொத்தம் 95.49 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்தை விட 1.70 சதவீதம் அதிகரித்துள்ளது.
மெட்ரிக் பள்ளிகள்:
மாவட்டத்தில் 143 மெட்ரிக் பள்ளிகளைச் சேர்ந்த 5 ஆயிரத்து 70 மாணவர்கள், 4,473 மாணவியர் என மொத்தம் 9,543 பேர் தேர்வெழுதினர். இதில் 5,031 மாணவர்கள், 4,462 மாணவியர் என மொத்தம் 9,493 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 99.48. கடந்த ஆண்டு 99.60 சதவீதமாக இருந்து, நடப்பாண்டில் 0.12 சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளது.
மாநகராட்சி, நகராட்சி பள்ளிகளைப் பொருத்தவரை, 12 பள்ளிகளைச் சேர்ந்த 949 மாணவர்கள், 1,911 மாணவிகள் என மொத்தம் 2,860 பேர் எழுதினர். இதில், 882 மாணவர்கள், 1,808 மாணவிகள் என மொத்தம் 2,690 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 94.06 ஆகும். கடந்த ஆண்டில் தேர்ச்சி சதவீதம் 90.50. இந்த ஆண்டில் 3.56 சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது.
அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதிப் பள்ளிகள்:
மாவட்டத்தில் 21 அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 1,875 மாணவர்கள், 2,378 மாணவிகள் என மொத்தம் 4,253 பேர் தேர்வெழுதினர். இதில், 1,775 மாணவர்கள், 2,348 மாணவிகள் என மொத்தம் 4,123 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 96.94 ஆகும். கடந்த ஆண்டில் தேர்ச்சி சதவீதம் 94.82 ஆக இருந்தது. இந்த ஆண்டில் 2.12 சதவீதம் அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில் 21 சுயநிதிப் பள்ளிகளைச் சேர்ந்த 941 மாணவர்கள், 563 மாணவிகள் என மொத்தம் 1,504 பேர் தேர்வெழுதினர். இதில் 928 மாணவர்கள், 561 மாணவிகள் என மொத்தம் 1,489 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 99.00 ஆகும். கடந்த ஆண்டிலும் 99.00 சதவீதமே தேர்ச்சி இருந்தது.
மொத்த அளவில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 166 மாணவர்கள், 141 மாணவிகள் என மொத்தம் 307 பேர் குறைவாகவே தேர்வெழுதினர். ஆனால், கடந்த ஆண்டை விட 97 மாணவர்கள், 26 மாணவிகள் என மொத்தம் 123 பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி, 1.44 சதவீதம் மொத்தம் அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com