பல்லடம் கே.என்.புரத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து திமுக பொதுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில், இந்தி திணிப்பை எதிர்த்தும், நீட் நுழைவுத் தேர்வைக் கண்டித்தும் இந்தப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட அவைத் தலைவர் கே.என்.திருமூர்த்தி தலைமை வகித்தார். பல்லடம் ஒன்றிய, நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். பல்லடம் ஒன்றியச் செயலாளர் சு.கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் புதுக்கோட்டை விஜயா, மாவட்டச் செயலாளர் க.செல்வராஜ், மாவட்ட பொறியாளர் அணி செயலாளர் சிற்பி க.செல்வராசு,மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சரஸ்வதி, பொங்கலூர் ஒன்றியச் செயலாளர் பி.அசோகன் உள்பட பலர் பங்கேற்று பேசினார்கள். ஆர்.கந்தசாமி நன்றி கூறினார்.