ஊராட்சி மன்ற அலுவலகம், நியாயவிலைக் கடை திறப்பு

சேவூர் அருகே புதிதாகக் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகம்,  நியாயவிலைக் கடை ஆகியவற்றை சட்டப் பேரவைத் தலைவர் ப.தனபால் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தார்.

சேவூர் அருகே புதிதாகக் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகம்,  நியாயவிலைக் கடை ஆகியவற்றை சட்டப் பேரவைத் தலைவர் ப.தனபால் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தார்.
 அவிநாசி ஒன்றியம், முறியாண்டம்பாளையம் ஊராட்சியில் ரூ. 12 லட்சம் மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகம், ரூ. 14.55 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கிராம ஊராட்சி சேவை மையம், ஆலத்தூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் ரூ. 8.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாய விலைக் கடை ஆகியவற்றை சட்டப் பேரவைத் தலைவர் ப.தனபால் திறந்து வைத்தார். கூட்டுறவு சங்கத் தலைவர்கள் சேவூர் ஜி.வேலுசாமி, எஸ்.ஆர்.சுப்பிரமணியம், இயக்குநர் ஜெகதீசன், முன்னாள் எம்எல்ஏ ஏ.ஏ.கருப்பசாமி, கூட்டுறவு சங்கச் செயலாளர் ஜின்னா, ஊராட்சிச் செயலாளர் மகாலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com