அரசுப் பேருந்து ஜப்தி

வாகன விபத்தில் நஷ்ட ஈடு வழங்காததைத் தொடர்ந்து, தாராபுரத்தில்  அரசுப் பேருந்து வியாழக்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.

வாகன விபத்தில் நஷ்ட ஈடு வழங்காததைத் தொடர்ந்து, தாராபுரத்தில்  அரசுப் பேருந்து வியாழக்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.
காங்கயம், குங்காருபாளையத்தைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி. விவசாயி. இவரது மனைவி பாப்பாத்தி.இவர், கடந்த 18.10.2010 அன்று கொடுவாயில் இருந்து அரசு பேருந்தில் காங்கயம் வந்தார். அவர், களிமேடு பேருந்து நிறுத்தத்தில் இறங்கியபோது தவறி விழுந்ததில் உயிரிழந்தார்.
இதுகுறித்து, அவரது குடும்பத்தினர் நஷ்டஈடு கோரி வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த தாராபுரம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் பாப்பாத்தி குடும்பத்துக்கு நஷ்டஈடாக ரூ. 3 லட்சத்து 30 ஆயிரம் வழங்க 19.6.2017-இல் உத்தரவிட்டது.
ஆனால், இதுவரை நஷ்டஈடு  வழங்கப்படாததால், நீதிபதி கருணாநிதி உத்தரவின் பேரில் ஈரோட்டிலிருந்து பழனி செல்லும் அரசுப் பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com