தனியார் வங்கி முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தர்னா

அவிநாசி அருகே உள்ள கருவலூரில் முன் பணம் செலுத்தித் தவணை முறையில் இருசக்கர வாகனம் பெற்றுத் தராத தனியார் வங்கி முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வியாழக்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.

அவிநாசி அருகே உள்ள கருவலூரில் முன் பணம் செலுத்தித் தவணை முறையில் இருசக்கர வாகனம் பெற்றுத் தராத தனியார் வங்கி முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வியாழக்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.
கருவலூரில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியில் ரூ. 3,500 செலுத்தினால் மாதத் தவணை முறையில் இருசக்கர வாகனம் பெற்றுத் தருவதாக கடந்த அக்டோபர் மாதம்  அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த கே.மணி ரூ. 3,500 செலுத்தி ரசீது பெற்றுள்ளார்.
ஆனால், இதுநாள் வரை அவருக்கு இருசக்கர வாகனம் வழங்கப்படவில்லை. மேலும், அவர் பணம் செலுத்தவில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறி புறக்கணித்து வந்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த மணி, தான் ரூ. 3,500 செலுத்தியும் இருசக்கர வாகனம் வழங்காததைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் எம்.அருண், பொறுப்பாளர் சிவகுமார் ஆகியோர் தலைமையில் வங்கி முன்பு தர்னாவில் ஈடுபட்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், வங்கி நிர்வாகத்தினர், மணிக்கு இருசக்கர வாகனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து, அனைவரும் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com