அவிநாசியில் மூதாட்டியிடம் 5 பவுன் சங்கலியைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
அவிநாசி, மடத்துப்பாளையம் சாலை, மகா நகர் பகுதியைச் சேர்ந்த துரைசாமி மனைவி ராஜம்மாள்(65). இவர், நடுவச்சேரி சாலையில் வியாழக்கிழமை நடந்து சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் ராஜம்மாள் அணிந்திருந்த 5 பவுன் சங்கலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் அவிநாசி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.