உடுமலை சீனிவாசா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் திருமூர்த்தி குத்துவிளக்கேற்றி கண்காட்சியை துவக்கிவைத்தார். பள்ளித் தாளாளர் விக்னேஷ் ஆர்.ரங்கநாதன், பள்ளிக் குழு உறுப்பினர் பங்காருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்காட்சியில் 350- க்கும் மேற்பட்ட படைப்புகள் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன. பேராசிரியர்கள் டாக்டர் கருணாநிதி, கார்த்திகேயினி ஆகியோர் நடுவர்களாக இருந்து சிறந்த படைப்புகளை தேர்வு செய்தனர்.
இதில், பள்ளி முதல்வர் ஜாஸ்மின் ஜேக்கப், ஆசிரியர்கள், பள்ளிக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.