தாராபுரத்தில் உழவர் பாதுகாப்பு திட்ட முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, வட்டாட்சியர் வெங்கடலட்சுமி தலைமை வகித்தார். முகாமில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து 750 மனுக்கள் பெறப்பட்டன. இதில் உடனடி தீர்வாக 500 மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு ரூ. 3 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.