தமிழ்நாடு மின்சார வாரிய ஊர்தி ஓட்டுநர் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் காங்கயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். மாநில இணைச் செயலாளர் பால்ராஜ் வரவேற்றார். மாநில துணைச் செயலாளர் ரஃபீ அகமது, திருவேங்கடம், மாநில ஒருங்கிணைப்பாளர் முருகன், அமைப்பு செயலாளர் சதாசிவம், அன்புமணி ஆகியோர் சிறப்புரையற்றினர்.
இதில், ஊதிய உயர்வு உள்ளிட்ட ஓட்டுநர் தொழிலாளர்களின் 30-க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை பரிசீலித்து அரசு நிறைவேற்றித் தரவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.நாகராஜன், மாநில தலைமை நிலைய செயலாளர் சரவணன் உள்ளிட்ட 9 மண்டலத்தில் இருந்து மாநில இணைச் செயலாளர்கள், மண்டலச் செயலாளர்கள், நிர்வாகக் குழு உறுப்பினர்கள், சங்க நிர்வாகிகள் என 200 பேர் கலந்து கொண்டனர்.