கடையின் பூட்டை உடைத்து ரூ. 80 ஆயிரம் திருட்டு

வெள்ளக்கோவிலில் கடையின் பூட்டை உடைத்துப் பணம் திருடப்பட்டுள்ளது.

வெள்ளக்கோவிலில் கடையின் பூட்டை உடைத்துப் பணம் திருடப்பட்டுள்ளது.
முத்தூர் சாலை, கொங்கு நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (37). இவர், டி.ஆர்.நகரில் வட்டிக் கடை வைத்துள்ளார். திங்கள்கிழமை மதியம் கடையின் கண்ணாடிக் கதவை மட்டும் பூட்டிவிட்டு சாப்பிடச் சென்றுள்ளார்.
பின்ன மாலை 4 மணிக்கு மீண்டும் கடைக்கு வந்து பார்த்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு, கண்ணாடிக் கதவு திறந்துகிடந்தது. உள்ளே மேஜையின் இழுப்பறையும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த ரூ. 80 ஆயிரம் திருட்டுப் போயிருப்பது தெரியவந்தது.  இதுகுறித்த புகாரின் பேரில் வெள்ளக்கோவில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com