தாராபுரத்தில் அக்டோபர்14-இல் வேலைவாய்ப்பு முகாம்

மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலமாக அக்டோபர் 14-இல் தாராபுரத்தில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்றுப் பயன்பெறலாம்.

மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலமாக அக்டோபர் 14-இல் தாராபுரத்தில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்றுப் பயன்பெறலாம்.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்களைக் கொண்டு வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலமாக மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் வரும் அக்டோபர் 14-ஆம் தேதி, தாராபுரம், என்.சி.பி. நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.
இம்முகாமில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகள் மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள படிக்காத, தொழிற்பயிற்சி, பட்டயப் படிப்பு, இளநிலை பட்டம், முதுநிலை பட்டம் படித்த இளைஞர்கள், இளம்பெண்கள்  கலந்துகொண்டு பயன்பெறலாம்.
முகாமில் கலந்துகொள்ள வருபவர்கள், தங்களது சுய குறிப்பு, அனைத்து கல்விச் சான்றிதழ்கள் (அசல் மற்றும் நகல்), குடும்ப அட்டை, ஆதார் அட்டை நகல் மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் ஆகியவற்றுடன்  வர வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு, இணை இயக்குநர், திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மகளிர் திட்டம், மாவட்ட ஆட்சியர் வளாகம், திருப்பூர் மாவட்டம் என்ற முகவரியிலோ, அல்லது  0421 2971149,  94440 94395 என்ற எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com