உடுமலை பிரசன்ன விநாயகர் கோயிலில் நவராத்திரியையொட்டி இசை, இலக்கிய கலை விழா மற்றும் ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் செப்டம்பர் 21-ஆம் தேதி தொடங்க உள்ளன.
உடுமலை, கார்த்திகை விழா மன்றம் சார்பில் 56-ஆவது ஆண்டாக நடைபெறும் இந்த நிகழ்ச்சிகள் செப்டம்பர் 21-ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி வரை நடை பெற உள்ளன. இதில், இசை நிகழ்ச்சி, ஆன்மிக பேருரை, பட்டிமன்றம், வழக்காடு மன்றம், பரத நாட்டியம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் தினமு ம் மாலை நேரங்களில் நடைபெற உள்ளன.
நிறைவு நாளான செப்டம்பர் 29-ஆ ம் தேதி புலவர் மா.ராமலிங்கம் தலைமையில் மனித வள மேம்பாட்டுக்கு உ ற்ற துணையாக இருப்பது ஆன்மிகமா? அறிவியலா? எனும் தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற உள்ளது. கார்த்திகை விழா மன்றச் செயலாளர் அங்கு. பாலசுப்பிரமணியம் மற்றும் நிர்வாகிகள், இந்து அறநிலையத் துறை அதிகாரி கள் இதற்கான ஏற்பாடுகளைச் செய்து
வருகின்றனர்.