பல்லடம் அருகே உள்ள, பொங்கலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 22) காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று பல்லடம் மின் வாரிய செயற்பொறியாளர் எம்.ராஜாமணி தெரிவித்துள்ளார்.
மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: பொங்கலூர், காட்டூர், தொட்டம்பட்டி, மாதப்பூர், கெங்கநாயக்கன்பாளையம், பெத்தாம்பாளையம், பொல்லிகாளிபாளையம், கண்டியன்கோயில்,தெற்கு அவிநாசிபாளையம், உகாயனூர், என்.என்.புதூர், வடக்கு அவிநாசிபாளையம்.