உலக புத்தக தினக் கொண்டாட்டம்

உடுமலை அருகே திங்கள்கிழமை உலக புத்தக தின விழா கொண்டாடப்பட்டது.

உடுமலை அருகே திங்கள்கிழமை உலக புத்தக தின விழா கொண்டாடப்பட்டது.
உடுமலை வட்டம்,  ஜல்லிபட்டி ஊராட்சிக்கு உள்பட்ட கொங்குரார் குட்டை பகுதியில் அமைந்துள்ள லிங்கமாவூர் பழங்குடியினர் நல அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் இந்த விழா நடைபெற்றது. 
இதையொட்டி பள்ளியில் படித்து வரும் அனைத்து மாணவ,  மாணவிகளும் ஜல்லிபட்டி நூலகத்தில் உறுப்பினர்களாகத் தங்களை இணைத்துக் கொண்டனர்.
 அப்போது கதைகள், சிறுவர் நூல்கள் கொண்ட  புத்தக கண்காட்சி நடைபெற்றது. புத்தகங்களை வாசிப்பது அவசியம் என அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.  மாணவர்கள் தாங்கள் படித்த கதைகளை அடுத்தவர்களுக்கு சொல்லி மகிழ்ந்தனர்.  பள்ளி தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன்,  ஆசிரியர் பாண்டியராஜன், நூலகர் லட்சுமணசாமி ஆகியோர் இதில் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com