திருப்பூரில் ரூ. 1 கோடி செலவில் விளையாட்டுப் பூங்கா

திருப்பூர்,  ராக்கியபாளையம் வி.ஜி.வி. கார்டனில் ரூ. 1 கோடியே 8 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட விளையாட்டுப் பூங்காவை

திருப்பூர்,  ராக்கியபாளையம் வி.ஜி.வி. கார்டனில் ரூ. 1 கோடியே 8 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட விளையாட்டுப் பூங்காவை திருப்பூர் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினர் சு.குணசேகரன் திறந்து வைத்தார். 
திருப்பூர் மாநகராட்சி 34-ஆவது வார்டுக்கு உள்பட்ட  ராக்கியபாளையம் வி.ஜி.வி. கார்டனில்  அம்ருத் திட்டத்தில், ரூ. 1 கோடியே 8 லட்சம் மதிப்பில் விளையாட்டுப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. 
இதில்,  சிறுவர், சிறுமியர்களுக்கான விளையாட்டு சாதனங்கள்,  அழகு கான்கிரீட் சிலைகள், செயற்கை நீரூற்று,  புல்தரை மற்றும் செடிகள்,  பேவர் பிளாக் நடைபாதை உள்ளிட்ட அம்சங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பூங்காவை திருப்பூர் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினர்  சு.குணசேகரன் திறந்து வைத்து பார்வையிட்டார். இதில்,  மாநகராட்சி உதவி ஆணையர் ஷபியுல்லா உள்பட பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com