பல்லடம் கோட்ட மின் நுகர்வோருக்கான குறை தீர் முகாம் புதன்கிழமை(ஏப்ரல் 18) நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் பல்லடம் கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் முகாம் வரும் பல்லடம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் புதன்கிழமை(ஏப்ரல் 18) காலை 11 மணிக்கு பல்லடம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் கே.தமிழ்சேகரன் தலைமையில் நடைபெறவுள்ளது.
இதில் மின் நுகர்வோர் பங்கேற்று தங்களது குறைகள் ஏதேனும் இருப்பின் நேரடியாக தெரிவித்து பயன் பெறலாம் என்று பல்லடம் செயற்பொறியாளர் எம்.ராஜாமணி தெரிவித்துள்ளார்.