"கள்' இறக்கி விற்பனை: 6 பேர் கைது

வெள்ளக்கோவில் அருகே வள்ளியிரச்சல் கிராமத்தில் கள் இறக்கி விற்பனை செய்த 6 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

வெள்ளக்கோவில் அருகே வள்ளியிரச்சல் கிராமத்தில் கள் இறக்கி விற்பனை செய்த 6 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
வள்ளியிரச்சல் பகுதியில் வடுகபாளையம் சிவகுமார் (35), வரக்காளிபாளையம் சின்னச்சாமி (45), ராஜ்குமார் (35), ஈஸ்வரமூர்த்தி (57) ஆகியோர் தங்களது தோட்டங்களில் மரம் ஏறும் தொழிலாளிகளான பெரியசாமி, ஈஸ்வரன் ஆகியோர் மூலம் 60 தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்து வந்துள்ளனர். இதைக் கண்டறிந்த  வெள்ளக்கோவில் காவல் நிலைய ஆய்வாளர் மு.ஜெயபாலன்  இந்த 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com