மாணவ, மாணவியருக்கு கோடைக்கால பயிற்சி முகாம்

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயதுக்கு உள்பட்ட மாணவ, மாணவிகளுக்கான கோடைக் காலப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயதுக்கு உள்பட்ட மாணவ, மாணவிகளுக்கான கோடைக் காலப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
இது குறித்து மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஜா.பியூலா ஜேன் சுசீலா வெளியிட்ட செய்தி:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் 2018-19ஆம் ஆண்டுக்கான 18 வயதுக்கு உள்பட்ட மாணவ, மாணவிகளுக்கான கோடைக்காலப் பயிற்சி முகாம் 21 நாள்கள் நடைபெற உள்ளது. 21-04-18ஆம் தேதி முதல் 11-05-18ஆ ம் தேதி வரை காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் 6.30 மணி வரை சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் உள்ளபல்நோக்கு விளையாட்டு அரங்கத்தில் இந்த பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
தடகளம், கூடைப்பந்து, கபடி, கால்பந்து, கையுந்துப் பந்து போன்ற விளையாட்டுக்களுக்கு சிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி முகாமில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் நிறைவு நாளான மே 11ஆம் தேதி சான்றிதழ் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com