வெள்ளகோவிலில் செவிலியர் மணிமாலா தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக மருத்துவர்களைக் கண்டித்து திருப்பூரில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மாநகராட்சி அலுவலகம் அருகே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில துணைத் தலைவர் சாவித்ரி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பவித்ரா தேவி முன்னிலை வகித்தார்.
செவிலியர் மணிமாலாவை மனஉளைச்சலுக்கு உள்ளாக்கி, தற்கொலைக்குத் தூண்டிய இரு பெண் மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கையை காவல் துறை மேற்கொள்ள வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மாவட்டத் தலைவர் ஆர்.மைதிலி, பொருளாளர் ஷகிலா உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் இதில் பலர் கலந்துகொண்டனர்.