அரசுக் கல்லூரி மாணவர்  தற்கொலை

உடுமலையில் அரசுக் கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

உடுமலையில் அரசுக் கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
உடுமலை அரசு கலைக் கல்லூரியில் செல்வரா ஜ் என்பவரது மகன் ஹரிகிருஷ்ணன் (19) இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில்  வீட்டைவிட்டுச் சென்ற ஹரிகிருஷ்ணன் வீடு திரும்பவில்லையாம். 
இதையடுத்து பெற்றோர் அவரை பல இடங்களிலும் தேடிவந்தனர்.
இந்நிலையில் அவரது சடலம் அரசு கலைக் கல்லூரி எதிரில் உள்ள ஒரு  கிணற்றில் கிடப்பதாக போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்துள்ளது. 
அங்கு சென்ற போலீஸார் ஹரிகிருஷ்ணன் சடலத்தைக் கிணற்றில் இருந்து மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  மேலும், இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுமக்கள் கோரிக்கை: ஒரு தனியார் அறக்கட்டளைக்குச் சொந்தமான அந்த பாழும் கிணற்றில் தற்கொலைச் சம்பவங்கள் தொடந்து நடைபெற்று வருகிறது. ஓராண்டில் மட்டும் ஏராளமானோர் அந்த கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். எனவே,அந்த கிணற்றை மூட  வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com