பெருமாநல்லூரை அடுத்துள்ள பள்ளிப்பாளையத்தில் இளைஞர் கொலை தொடர்பாக 5 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
பொங்குபாளையம் ஊராட்சி, பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குட்டி என்ற குழந்தைகுமார் (31). இவர், அதே பகுதியில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில், இவரது வீட்டில் கடந்த 5-ஆம் தேதி இரவு மனைவி காளீஸ்வரி, குழந்தை யாழினி ஆகியோர் உறங்கிக் கொண்டிருந்தனராம். அப்போது, குழந்தைகுமாரின் உறவினரான இளைஞர் சிவராஜ் (29) என்பவர், போதையில் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.
இதையறிந்த குழந்தைகுமார் மற்றும் அவரது உறவினர்கள் சிவராஜைத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த சிவராஜ், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் உயிரிழந்தார். இதுகுறித்து பெருமநல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து குழந்தைகுமார், தேமலைக் கண்ணன், பூபதி, சசிக்குமார், கருப்புசாமி ஆகியோரைத் தேடி வருகின்றனர்.