கல்லூரி மாணவி தற்கொலை

வெள்ளக்கோவிலில் கல்லூரி மாணவி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

வெள்ளக்கோவிலில் கல்லூரி மாணவி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
அகலரைப்பாளையம்புதூரைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவருடைய மகள் அமுதா (21). இவர் ஈரோடு மாவட்டம், திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் எம்பிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். 
இந்நிலையில், கல்விக் கட்டணம் ரூ.20 ஆயிரம் செலுத்தத் தாமதமாகியதாம். இதனால்,  மனம் உடைந்து காணப்பட்ட அவர் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 
இதுகுறித்து வெள்ளக்கோவில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com