வெள்ளக்கோவில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை ரூ.18.59 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏல விற்பனை நடைபெற்றது.
இந்த வார ஏலத்துக்கு மதுரை, வேடசந்தூர், திண்டுக்கல், அறவக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 45 விவசாயிகள் வந்திருந்தனர். காங்கயம், முத்தூர், சிவகிரியிலிருந்து 10 வியாபாரிகள் வந்திருந்தனர்.
மொத்த வரத்து 326 மூட்டைகள். எடை 16, 803 கிலோ. அதிகபட்சமாக கிலோ ரூ.137.05, குறைந்தபட்ச விலை ரூ.65.85 என ஏலம் போனது. சராசரி விலை கிலோ ரூ.113.55. விற்பனைக் கூட கண்காணிப்பாளர் ரா.மாரியப்பன் முன்னிலையில் விற்பனைத் தொகை விவசாயிகள் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.