வெள்ளக்கோவிலில் பல்வேறு கோயில்களில் மாசி மகா சிவராத்திரி விழா இரவு தொடங்கி புதன்கிழமை அதிகாலை வரை நடைபெற்றது.
மூலனூர் சாலையிலுள்ள தெய்வநாயகி அம்பாள் சமேத சோழீஸ்வரர் சுவாமி கோயிலில் நான்கு கால அபிஷேகம் நடத்தப்பட்டு, ஆன்மிகச் சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டன. பழமை வாய்ந்த மயில்ரங்கம் ஈஸ்வரன் கோயிலில் இரவு முழுவதும் சிவபுராண உபன்யாசத்துடன் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. காங்கயம் சாலை, இரட்டைக் கிணற்றிலுள்ள சிவலோகநாதர் கோயில் உள்பட இப் பகுதியில் 10- க்கும் மேற்பட்ட கோயில்களில் சிவராத்திரி விழா நடைபெற்றது.