முத்தலாக் மசோதா என்ற பெயரில் ஷரியத் சட்டத்தில் கைவைக்கும் மத்திய அரசைக் கண்டித்து அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் குமரன் சிலை முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, அமைப்பின் தலைவர் அப்துல் மஜீத் தலைமை வகித்தார். மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில முதன்மை தலைவர் அப்துல் ரஹ்மான், மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட சுமார் ஆயிரம் பேர் வரை கலந்து கொண்டனர்.