காங்கயத்தில் டிடிவி.தினகரன் ஆதரவாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்ட பொருளாளர் சின்னச்சாமி தலைமை வகித்தார். காங்கயம் நகரச் செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர் சிவசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், முன்னாள் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான சி.சண்முகவேலு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை உடுமலையில் ஜனவரி 18-ஆம் தேதி சிறப்பாக கொண்டாடுவது, மொழிப்போராட்ட தியாகிகளை நினைவுகூறும் வகையில் வரும் 26-ஆம் தேதி தாராபுரத்தில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், அந்த அமைப்பின் மாவட்ட அவைத் தலைவர் நரேந்திரன், மாவட்ட துணை செயலாளர் மாரிமுத்து, சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் சையது இப்ராஹிம், மகளிர் அணி மாவட்ட செயலர் கலாராணி, விவசாய அணியின் மாவட்ட செயலாளர் அறிவுடைநம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர்.