பல்லடம் கே.என்.புரத்தில் கிணற்றில் குதித்து விவசாயத் தொழிலாளி வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.
பல்லடம், கே.என்.புரத்தில் புண்ணியமூர்த்தி என்பவருக்கு சொந்தமான விவசாயக் கிணற்றில் ஆண் சடலம் மிதப்பதாக போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, பல்லடம் தீயணைப்புத் துறையின் உதவியுடன் சடலம் மீட்கப்பட்டது.
விசாரணையில் உயிரிழந்தவர், அதே பகுதியைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளி புஷ்பராஜ் என்பது உறுதிசெய்யப்பட்டது. மது அருந்தும் பழக்கம் கொண்ட புஷ்பராஜுக்கு, மனைவி, மகனுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மது அருந்தி விட்டு வீட்டுக்கு வியாழக்கிழமை வந்துள்ளார். இதனால் வீட்டில் இருப்பவர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் மனமுடைந்த புஷ்பராஜ் அதே பகுதியில் இருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது. இது பற்றி பல்லடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.