நியாயவிலைக் கடைக்கு கட்டுமானப் பணி துவக்கம்

கணக்கம்பாளையம்- குருவாயூரப்பன் நகர், ஈட்டிவீரம்பாளையம்- கருக்கன்காட்டுபுதூர் ஆகிய இரு இடங்களில் தலா ரூ. 9 லட்சம் மதிப்பில் நியாயவிலைக் கடைகள் அமைக்கும் பணி சனிக்கிழமை

கணக்கம்பாளையம்- குருவாயூரப்பன் நகர், ஈட்டிவீரம்பாளையம்- கருக்கன்காட்டுபுதூர் ஆகிய இரு இடங்களில் தலா ரூ. 9 லட்சம் மதிப்பில் நியாயவிலைக் கடைகள் அமைக்கும் பணி சனிக்கிழமை தொடங்கப்பட்டது.
இரு இடங்களில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிகளுக்கு, திருப்பூர் ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் அ.சாமிநாதன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ் , முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் முத்துரத்தினம், கூட்டுறவு சங்கப் பொறுப்பாளர்கள் முருகசாமி, தண்டபாணி, மகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பூர் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினர் கே.என்.விஜயகுமார் பூமி பூஜை செய்து, நியாயவிலைக் கடை கட்டுமானப் பணிகளைத் தொடக்கி வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com