கணக்கம்பாளையம்- குருவாயூரப்பன் நகர், ஈட்டிவீரம்பாளையம்- கருக்கன்காட்டுபுதூர் ஆகிய இரு இடங்களில் தலா ரூ. 9 லட்சம் மதிப்பில் நியாயவிலைக் கடைகள் அமைக்கும் பணி சனிக்கிழமை தொடங்கப்பட்டது.
இரு இடங்களில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிகளுக்கு, திருப்பூர் ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் அ.சாமிநாதன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ் , முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் முத்துரத்தினம், கூட்டுறவு சங்கப் பொறுப்பாளர்கள் முருகசாமி, தண்டபாணி, மகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பூர் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினர் கே.என்.விஜயகுமார் பூமி பூஜை செய்து, நியாயவிலைக் கடை கட்டுமானப் பணிகளைத் தொடக்கி வைத்தார்.