சேவூர் அருகே அ.குரும்பாளையத்திலுள்ள வெங்கடேஸ்வரா வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 24-ஆம் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
பள்ளித் தாளாளர் ஜெயந்தி சேகர் விழாவுக்குத் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் பி.சிவராஜ், முன்னாள் தலைமை ஆசிரியர் எஸ்.நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் ரஞ்சித் வரவேற்றார். வேளாண்மைத் துறை கண்காணிப்பாளர் ஏ.செல்வராஜ் சிறப்புரையாற்றினர்.
இதையடுத்து, பள்ளி மாணவர்களின் பரதம் , ஒயிலாட்டம், கோலாட்டம், விழிப்புணர்வு நாடகங்கள் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில் முன்னாள் மாணவர்கள், பெற்றோர், பள்ளி அறங்காவலர்கள், நிர்வாகிகள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.