ஜனவரி 25-ஆம் தேதி  விவசாயிகள் குறைதீர் கூட்டம்

மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஜனவரி 25-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஜனவரி 25-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து வேளாண்மைத் துறை சார்பில் கூறியதாவது:
மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்து, அவற்றுக்குத் தீர்வு காணும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஜனவரி 25-ஆம் தேதி, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட ஆரங்கில், மாவட்ட ஆட்சியரின் தலைமையில் காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. 
இக்கூட்டத்தில், விவசாயிகள் அனைவரும் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவித்து, நிவர்த்தி பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com