ஜனவரி 25-இல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருப்பூரில் ஜனவரி 25-ஆம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 

திருப்பூரில் ஜனவரி 25-ஆம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஜனவரி 25-ஆம் தேதி காலை 11 மணிக்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது. இம்முகாமில், வேலையளிக்கும் தனியார் துறையினர் கலந்துகொண்டு ஆள்களைத் தேர்வு செய்யவுள்ளனர்.
வேலை தேடுவோர் தங்கள் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு அட்டை, சுய தகவல் படிவத்துடன் இம்முகாமில் பங்கேற்கலாம். வேலையளிப்போரும் தங்களுக்குத் தேவையான காலியிடங்களை நிரப்பிடத் தங்கள் வருகையை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளவேண்டும்.
எழுத, படிக்கத் தெரிந்தவர்கள் முதல் முதுநிலைப் பட்டதாரிகள் வரை ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்கள், ஓட்டுநர்கள், தையல் பயிற்சி பெற்றவர்கள் இதில் கலந்துகொண்டு பயன்பெறலாம். வேலைவாய்ப்பு முகாமுக்கு வரும்போது தங்களது பதிவில் குறைகள் கண்டறியப்பட்டால்,  அதைச் சரி செய்து கொள்ளுதல், புதுப்பித்தல், கூடுதல் கல்விப் பதிவு செய்தல், தகுதியிருப்பின் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை விண்ணப்பம் பெற்று, உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். தனியார் துறைகளில் வேலையில் சேருவதால் அவர்களது வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு ரத்து செய்யப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com