திருப்பூர் அருகே  பஞ்சாலையில் தீ விபத்து

திருப்பூர் அருகே பஞ்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

திருப்பூர் அருகே பஞ்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
திருப்பூர், மங்கலம் போலீஸ் எல்லைக்கு உள்பட்ட வேலாயுதம்பாளையத்தில் தனியாருக்குச் சொந்தமான பஞ்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில்,  30-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வியாழக்கிழமை மாலை பணியில் இருந்தனர். அப்போது, திடீரென ஆலையில் தீப்பிடித்ததாகக் கூறப்படுகிறது. அந்தத் தீ, ஆலையில் வைக்கப்பட்டிருந்த பஞ்சில் பற்றி வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, அங்கிருந்த தொழிலாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
தொடர்ந்து, இதுகுறித்து பல்லடம் தீயணைப்புத் துறையினருக்கு த்தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடதுக்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் இரண்டு மணிநேரம் வரை போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பஞ்சு தீயில் எரிந்து சேதமடைந்தததாக கூற்பபடுகிறது.
இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com