காங்கயம் அருகே கூலித் தொழிலாளி சடலம் மீட்பு

காங்கயம் அருகே கூலித் தொழிலாளியின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.

காங்கயம் அருகே கூலித் தொழிலாளியின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.
காங்கயம் அருகே உள்ள சம்பந்தம்பாளையம், ராஜீவ் நகரைச் சேர்ந்தவர் சாமியப்பன் (எ) சின்னக்குட்டி (60). கூலித் தொழிலாளி. இவர், லட்சுமி நகரில் இருந்து சம்பந்தம்பாளையத்தில் உள்ள கோழிப் பண்ணைக்கு சனிக்கிழமை காலை 6.30 மணியளவில் சென்றுள்ளார்.
நீண்ட நேரம் ஆகியும் அவரைக் காணவில்லை. இதையடுத்து, அவரது குடும்பத்தினர் அவரைத் தேடியுள்ளனர்.
அப்போது முற்பகல் 11 மணிக்கு அந்தப் பகுதியில் சாலையோரம் உள்ள காட்டுக்குள் சாமியப்பன் சடலமாகக் கிடந்தது தெரியவந்துள்ளது.
இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற ஊதியூர் காவல் துறையினர் சடலத்தை மீட்டு, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com