திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள 63 வேலம்பாளையத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் புதன்கிழமை( ஜூலை 18) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து பல்லடம் வட்டாட்சியர் எல்.அருணா தெரிவித்ததாவது:
பல்லடம் வட்டம், 63 வேலம்பாளையம் கிராமத்தில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்ன ராமசாமி தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் புதன்கிழமை (ஜூலை 18) காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளித்து பயன் பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.