தாராபுரத்தில் மது விற்றவர் கைது

தாராபுரத்தில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டதாக ஒருவரை காவல் துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.

தாராபுரத்தில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டதாக ஒருவரை காவல் துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.
நல்லமன்நாயக்கன் பேட்டை வீதி அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடை பாரில் அரசு அனுமதியின்றி அதிகாலை நேரங்களில் மது விற்பனை நடைபெறுவதாக பொதுமக்களிடமிருந்து காவல் துறையினருக்கு புகார்கள் வந்தன.
இதைத் தொடர்ந்து,  காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான போலீஸார் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு மது விற்றதாக கார்த்திக் (27) என்பவரைக் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 17 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com