பல்லடத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் பெண் உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தைச் சேர்ந்த ராஜகோபால் மனைவி சாவித்திரி (65). இவர், பல்லடம், பெரியார் காலனியில் உள்ள பழனிசாமி என்பவரது வீட்டில் தங்கி சமையல் வேலை செய்து வந்தார்.
கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையைக் காவல் நிலையம் அருகே சாவித்திரி திங்கள்கிழமை கடக்கும்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார். இதுகுறித்து, பல்லடம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.