திருட்டு வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த நபர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
அவிநாசி காவல் சரகத்திற்கு உள்பட்ட பகுதியில் 2013ஆம் ஆண்டு நடைபெற்ற திருட்டு வழக்கில் கோபி கொலப்பலூர் குறவர் காலனியைச் அசோக்குமார் (46) என்பவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். நீதிமன்றம் இவரைப் பிடிக்க பிடியானை பிறப்பித்தது. இந்நிலையில், கோபி பேருந்து நிலையப் பகுதியில் இருந்த அசோக்குமாரை அவிநாசி போலீஸார் கைது செய்தனர்.