பல்லடத்தில் மின் நுகர்வோர் குறைதீர் முகாம் நவம்பர் 22ஆம் தேதி நடைபெறவுள்ளது.
பல்லடம் பகுதி மின் நுகர்வோர் குறைதீர் முகாம் பல்லடம் மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வைப் பொறியாளர் கே.தமிழ்சேகரன் தலைமையில், பல்லடம் மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நவம்பர் 22ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதில், மின் நுகர்வோர் பங்கேற்று மின் விநியோகம் தொடர்பான தங்களது குறைகளைத் தெரிவித்து நிவர்த்தி பெறலாம் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் பல்லடம் செயற்பொறியாளர் ஆர்.கோபால் தெரிவித்துள்ளார்.